Thursday, 21 July 2011

காயசித்தி தரும் சதுரகிரி மலையின் மூலிகைகள் தொடர்ச்சி..!



,

சதுரகிரி மலையின் தனித்துவமான மூலிகைகளைப் பற்றிய தகவல்கள் இன்றும் தொடர்கிறது. சதுரகிரி மலை பற்றி பகிர்வதற்கு இன்னமும் ஏராளமான தகவல்கள் பாக்கி இருந்தும், இந்த தொடரினை கடந்த வாரமே நிறைவு செய்திட விரும்பினேன்.இருப்பினும் ஏற்கனவே தட்டச்சு செய்து விட்ட மிக முக்கியமான ஒன்றிரண்டு தகவல்களை இந்த வாரத்தில் பகிர்ந்து இந்த தொடரினை நிறைவு செய்கிறேன்.சதுரகிரி மலையினை பற்றி இது வரை ஆவணப் படுத்தப் படாத சில தகவல்கள் இந்த வாரத்தின் நெடுகில் இடம்பெறும்.

வாருங்கள் காயசித்தி அளிக்கும் மூலிகைகளைப் பற்றிய பதிவினை தொடர்வோம்.

பொற்றலைக்கரிப்பான்

முந்தைய பதிவின் நிறைவில் குறிப்பிட்ட குருவரிக்கற்றாளைக்கு தென் திசையில் அம்புவிடும் தூரம் சென்றால் பொற்றலைக்கரிப்பான் என்று ஒரு மூலிகை இருக்கிறதாம். அதன் காய் மிளகு போல் இருக்குமாம். அதன் இலையைக் கையால் கசக்கினால் கைகளில் எரிவு எடுக்குமாம். அதன் சாற்றை பாடாணங்களில் (பாஷாணங்கள்) சேர்த்து அரைத்து புடமிட செந்தூரமாகுமாம். அந்த செந்தூரத்தை புசிக்க காய சித்தியுண்டாகுமாம்.

உதிரவேங்கை

கலங்கிமுனிவர் வனத்தில் இந்த உதிரவேங்கை மரங்கள் அதிகளவில் காணப்படுமாம். அது வேங்கைமரம் போல் இருப்பதுடன், அதன் தூர் கறுப்பாக இருக்குமாம், இந்த மரத்தை குத்தினால் இரத்தம் போன்ற நிறத்தில் பால்வருமாம். அந்தப் பாலைக் கொண்டுவந்து உலோகங்களுக்கு சுருக்கிட பேதிக்கும். அப்படி பேதித்த உலோகத்தை இந்த மரத்தின் பால் விட்டு உருக்க தங்கமாகும் அந்தத்தங்கத்தை புடமிட செந்தூரமாகும். அந்த செந்தூரத்தை ஒருவாரம் சாப்பிட காயசித்தி உண்டாகுமாம்.

சாயாவிருட்சம்

யூகிமுனி வனத்தின் வடக்குப் பகுதியில் ஒரு மண் மேடு இருக்கிறதாம் அதை அண்டிய பகுதிகளில் இந்த சாயா விருட்சம் வளர்ந்து இருக்கிறதாம்.
இதற்க்கு நிழற்காந்தன் என்று இன்னும் ஒரு பெயரும் வழங்கப்படுகிறது. இந்த விருட்சத்தின் நிழல் நிலத்தில் விழாதாம். அதன் நிறம் சாம்பல் நிறமாகவும் இலை புன்னை மரத்து இலை போலவும், காய் சுருண்ட வெள்ளரிக்காய் போலும் இருக்குமாம். இந்தமரத்தின் பட்டையைச் சீவினால் நீல நிறத்தில் பால்வருமாம். அந்த பாலைக் கொண்டுவந்து அதில் சுத்தி செய்த பாதரசம் விட்டு சூரியப்புடம் போட்டால் இறுகி இருக்குமாம் அதை எட்த்து செந்தூரமாக்கி நெய்யில் குழைத்து ஒருமண்டலம் உண்ண காயசித்தி உண்டாகுமாம்.

செந்தாடுபாவை

மேலே குறிப்பிட்ட சாயாவிருட்சம் இருக்கும் இடத்திற்க்கு நேர் வடக்கே செந்தாடுபாவை என்னும் ஒரு மூலிகைச் செடி இருக்கிறது. அந்தச் செடி குத்துக்காரைச் செடி போலவும், அதன் இலை சம்மட்டி இலை போலவும் இருக்குமாம். அதன் இலையைப் பிடுங்கி சாறு பிழிந்து அந்தச் சாற்றைக் கொண்டு சூதத்திற்க்குச் சுருக்கிட சூதம் கட்டும். பின் அந்த சூதத்தை எடுத்து சாயா விருட்சத்தின் பாலில் ஏழுநாள் ஊறவைத்து எடுத்துப் புடமிட்டு செந்தூரமாக்கி பசுநெய்யில் குழைத்து ஒருவாரம் சாப்பிட காயசித்தி உண்டாகுமாம்.

இத்துடன் சதுரகிரி மலையில் உள்ள அரிய மூலிகைகள் பற்றிய பதிவுகள் நிறைவடைகிறது. நாளைய பதிவில் சதுரகிரி பற்றிய சுவாரசியமான ஒரு தகவலுடன் சந்திக்கிறேன்.

காயசித்தி தரும் சதுரகிரி மலையின் மூலிகைகள்

,

சதுரகிரி மலையில் நிறைந்திருக்கும் மூலிகைகளின் அருமை பெருமைகள் சித்தர்களின் பாடல்களில் விரிவாக கொட்டிக் கிடக்கின்றன.அவற்றை தனியே தொகுத்து ஆய்வுகள் மேற் கொண்டிருந்தால் சித்த மருத்துவம் இன்னேரத்துக்கு உலகின் முதன்மையான மருத்துவ முறைகளில் ஒன்றாக திகழ்ந்திருக்கும். அத்தகைய பொன்னான வாய்ப்பினை நாம் தவற விட்டுவிட்டோமோ என்கிற ஆதங்கம் எனக்கு நிறையவே உண்டு. இப்போது கூட காலம் தாழ்ந்து விடவில்லை. தமிழக அரசும்,இந்த துறையில் ஆர்வமுள்ளோரும் கை கோர்த்தால், நமது சித்தர்களின் அரிய தெளிவுகளை மனிதகுலத்தை உய்விக்க பயன்படுத்திட முடியும்.

கடந்த மூன்று நாட்களாக பகிர்ந்து கொள்ளும் மூலிகைகள் பெரும்பாலும் சதுரகிரி மலைக்கே உரித்தானவை,அந்த வரிசையில் இன்று காயசித்தி அளிக்கும் மூன்று மூலிகைகளைப் பற்றி பார்ப்போம்.

வனபிரம்மி

முந்தைய பதிவில் குறிப்பிட்ட வெண்ணாவல் மரங்கள் இருக்கும் இடத்திலிருந்து வலது பக்கத்தில் வனபிரம்மி என்னும் மூலிகை இருக்கிறது. இது கொடியாகப் படர்ந்து இருக்கும். இதன் இலை நெல்லியிலை போல தடிப்பாக இருக்குமாம். இந்த மூலிகையை ஞாயிற்றுக் கிழமையன்று சாப நிவர்த்தி செய்து பறித்து அதன் வேரைக் கொண்டு வந்து சூரணித்து முப்பது நாட்கள் புளித்த காடியில் கலக்கி உட்கொள்ள காயசித்தியாகுமாம்.

முப்பிரண்டை

மேலே சொன்ன வனபிரம்மி கொடி யிருக்கும் இடத்திற்க்கு பக்கத்தில் முப்பிரண்டை இருக்கிறதாம்.இது சாதாரன பிரண்டை போல முப்பட்டையாக இருக்குமாம்.இதைக் கொண்டுவந்து சாறு எடுத்து சூதத்திற்க்குச் சுருக்கிட சூதம் கட்டுமாம்.உடனே அதையெடுத்து நாகத்துடன் இணைக்க நாகம் கட்டும். நாகம் சூதம் இந்த இரெண்டும் சேர்ந்த கலவையின் எடைக்கு சம எடை கெந்தி சேர்த்து இதே முலிகையின் சாறுவிட்டு அரைத்து புடமிட செந்தூரமாகும். அந்த செந்தூரத்தை சாப்பிட்டுவர காயசித்தி கிடைக்குமாம்.

குருவரிக்கற்றாளை

சதுரகிரியின் வடபாகத்தில் குறுவரிக் கற்றாளை என்று ஒரு மூலிகை இருக்குறதாம். அது பெருவிரல் பருமன் இருக்குமாம். ஒன்றரைச் சாண் உயரம் மட்டுமே வளருமாம். குறுக்கே வரிவரியாக வரிகள் காணப்படுமாம். இதற்க்குச் சாப நிவர்த்தி செய்து வேரை எடுத்துவந்து இடித்துச் சாறேடுத்து இரும்பை மெல்லிய தகடாகத் தட்டி இந்த சாற்றில் ஊறவைத்து எடுக்க அது தாமிரமாக மாறி இருக்குமாம். அதை செந்தூரம் செய்து உண்ண காய சித்தி உண்டாகுமாம்.

சதுரகிரியின் அற்புத மூலிகைகள் தொடர்ச்சி..

,

சதுரகிரி மலையில் உள்ள தனித்துவமான மூலிகைகளின் மகத்துவங்கள் பற்றிய தகவல்கள் இன்றும் தொடர்கிறது.

வெண்ணாவல்

சதுரகிரியின் மேற்குப் பகுதிகளில் அதிகளவில் காணப்படும் விருட்சங்களில் முக்கியமானது இந்த வெண்ணாவல் விருட்சம். இதன் பூ, காய், கனி எல்லாம் வெண்மையாக இருக்குமாம். இந்த விருட்சத்தின் மேற் பட்டையை போக்கி அடிப் பட்டையை வெட்டிக் கொண்டுவந்து குழித்தைலம் இறக்கி, அந்த தைலத்தை லேசாக சூடாக்கிய தாமிர தகட்டில் நாற்பது தடவைகள் தேய்க்க அது வெள்ளியாகுமாம். அந்த வெள்ளியைச் செந்தூரமாக்கி இதே வெண்ணாவல் மரப்பட்டையைத் தூளாக்கி அத்துடன் கலந்து மூன்று நாட்கள், ஆறு பொழுது பண எடை அளவு புசிக்க காயசித்தி உண்டாகுமாம்.

கணைஎருமை விருட்சம்

சதுரகிரியில் நந்தீஸ்வரர் ஆச்சிரமத்துக்கு மேற்கு திசையில் ஒரு நாளிகை தூரம் நடந்தால் கணைஎருமை விருட்ச மரங்கள் இருக்குமாம். தோற்றத்தில் அது இலுப்பை மரம் போல் இருக்குமாம், அதன் காய் உருண்டையாக இருப்பதுடன், அந்த மரத்தினடியில் ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமையைப் போல் கனைக்குமாம், அந்த மரத்தைக் குத்தினால் பால்வரும், அந்தப் பாலைக் கொண்டு வந்து தினமும் பண எடை அளவு, நாலு நாள் சாப்பிட மூர்ச்சை ஆகுமாம். அப்போது ஒருவர் அருகில் இருந்து நாளிகைக்கு ஒரு கரண்டி வீதம் பசும்பால் கொடுக்க மூர்ச்சை தெளியும். அப்படி மூர்ச்சை தெளிந்தவுடன் காயசித்தி உண்டாகுமாம்.

பவளத்துத்தி

மேலே சொன்ன கருனை விருட்ச மரங்களுக்கு வடக்குப் பக்கமாக அம்பு விடும் தூரத்தில் பவளத்துத்தி என்னும் ஒரு செடி உண்டு, அது துத்திச் செடி போலவும் அதன் இலை நுனியில் சுற்றிலும் சிவப்பு நிறம் படர்ந்தும், இலைக்காம்பு, தண்டு சிவப்பாகவும் இருக்கும். இதன் பூ பவள நிறத்தில் இருக்குமாம். இந்த செடியின் இலையை சூரணித்து ஆவின் நெய்யுடன் கலந்து வெருகடிப் பிரமாணம் அளவு எடுத்து ஒருவாரம் சாப்பிடக் காயசித்தி உண்டாகுமாம்.

உரோமவிருட்சம்

இராமதேவர் ஆச்சிரமத்திற்க்கு கீழ்திசையில் இரண்டு நாளிகை தூரம் நடந்தால் அங்கே உரோமவிருட்சம் என்று அழைக்கப்படும் மரங்கள் நிறைந்து காணப்படுமாம். அம்மரம் சாம்பல் நிறமாக இருக்குமாம், அதன் கிளைகள் உரோமத்தைப் போலவும், தொட்டால் பஞ்சுபோல மிருதுவாகவும் இருக்குமாம். அதன் பட்டையை இரும்பு படாமல் தட்டி எடுத்து சூரணித்து, அந்த சூரணத்தில் திருகடிப் பிரமாணம் எடுத்து தேனில் கலந்து ஒரு மண்டலம் உண்ண காயசித்தி உண்டாகுமாம். அப்படி உண்டு காயசித்தி பெற்றவர்களுடைய சிறுநீரானது பஞ்சலோகாத்தையும் பேதிக்கச் செய்யும் தன்மையுள்ளதாகிவிடுமாம்.

(சிவவாக்கியாரின் சிறுநீர் பட்டு இரும்பு பேதித்து தங்கமாக மாறியதாக ஒரு செவிவழிக் கதை உண்டு.ஒரு வேளை அவர் இது போன்ற காயகற்பம் உட்கொண்டதனால் கூட இருக்கலாம்)

இந்த உரோமவிருட்சத்தில் துளை போட்டு சுத்தி செய்யப்பட்ட பாதரசத்தை அந்த துளையில் ஊற்றி, அந்த விருட்சத்தின் பட்டையால் மூடி நாற்பத்தைந்து நாள் கழித்து பார்த்தால் அந்த பாதரசம் கட்டியிருக்குமாம். அதை எடுத்து இந்த மரத்தின் பட்டையை அரைத்து கவசம் செய்து முழப் புடமிட உருகி மணியாகுமாம், அந்த மணியை வாயில் போட்டுக் கொண்டவர்களின் உடலுக்கு , கத்தி வெட்டு, அம்பு போன்றவையால் எந்த பாதிப்பும் ஏற்படாதாம், அத்துடன் நரை, திரை, மூப்பு, பிணி மாறி காயசித்தியும் உண்டாகுமாம்.


,

சதுரகிரி மலையில் இருக்கும் அரிய சில மூலிகைகளின் இருப்பிடம் மற்றும் அவற்றின் மகத்துவம் குறித்த தகவல்கள் இன்றும் தொடர்கின்றது. இன்று புராண இதிகாசங்களில் மிகையாகவும்,மிகச் சிறப்பானதாகவும் வர்ணிக்கப் பட்டிருக்கும் சில மூலிகைகளைப் பற்றி பார்ப்போம்.

கற்பகதரு

கற்பக விருட்சம், பஞ்சு தரு என்கிற பெயர்களால் அறியப் படும் இந்த மரமானது மகாலிங்கர் சந்நிதிக்குப் பின்னால் இருக்கிறதாம்.இந்த மரத்தில் ஐந்து கிளைகள் இருக்குமென்றும் அவை ஒவ்வொன்றிலும் தனித்துவமான வெவ்வேறு வடிவத்திலான இலைகள் இருக்குமென்றும் கூறப் பட்டிருக்கிறது.இதனை வைத்தே இந்த மரத்தினை அடையாளம் காணலாம். இந்த மரத்தின் பட்டையை ஒரு பண எடையளவு ஒருவாரம் உட்கொள்ள அனைத்து நோய்களும் அகலுமாம்.மேலும் இந்த மரத்தை தட்டினால் பால் வருமெனவும்,அதனை ஒரு பண எடையளவு ஒரு மண்டலம் உட்கொள்ள காயசித்தியாகும் என குறிப்புகள் காணக் கிடைக்கிறது.

சஞ்சீவி மூலிகை

இராமாயணத்தில் இந்த மூலிகைக்காக ஒரு மலையையே பெயர்த்தெடுத்த கதையினை அறிவீர்கள். அத்தனை மகத்துவம் வாய்ந்த இந்த மூலிகையை சஞ்சீவினி மூலிகை, எமனை வென்றான் மூலிகை, தசையொட்டி மூலிகை என்று வெவ்வேறு பெயர்களினால் குறிப்பிட்டிருக்கின்றனர்.இதன் இலையானது சிறுவேப்பிலை போல இருக்குமாம். இது குத்து செடியாகும். இந்த செடியின் இலையின் சாறினை அகால மரணமடைந்தவரின் நாசியில் ஒரு சிட்டிகை விட்டு ஊத உயிர் பெற்று எழுந்து விடுவார்களாம். இது தவிர இந்த மூலிகையின் சாறினை வெட்டுப் பட்ட இடத்தில் தடவ அவை ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்வதுடன் அவர் உறங்கி எழுந்தவர் போல புத்துணர்ச்சியுடன் எழுவார் என கூறப் பட்டிருக்கிறது. மூர்ச்சை அடைந்தவர்களுக்கு இந்த மூலிகையினால் விசிற மூர்ச்சை தெளிந்து எழுந்து விடுவார்களாம். இந்த மூலிகையில் பட்டு வரும் காற்றினை சுவாசித்தாலே ஆயுள் விருத்தியும், காயசித்தியும் கிடைக்குமாம். ஆச்சர்யம்தானே!

உரோமவேங்கை

சதுரகிரி மலையில் சங்கிலிப் பாறை இருக்கிறதாம்.அதற்க்கு தென் கிழக்கில் உரோமவேங்கை என்னும் விருட்சம் இருக்கிறது.இது வேங்கை மரம் போல் மிருதுவாகவும், அடித்தூர் சாம்பல் நிறத்திலும் இருக்குமாம்.அதன் விழுதானது கவரிமான் உரோமம் போல ஒருசாண் அல்லது அரைச்சாண் நீளத்தில் தொங்கிக் கொண்டிருக்குமாம். இதன் பட்டையைச் சிறிது பெயர்த்தால் இரத்தம் போல் பால் வடியுமாம். அந்தப் பாலைக் கொண்டுவந்து சொர்ணத்திற்க்குச் சுருக்கிட பற்பமாகுமாம், அதை சாப்பிட காயத்தி கிடைக்குமாம்.

கற்றாமரை

சதுரகிரி மலையில் காலங்கி வனம் இருக்கிறது.அதன் வடக்குப் பக்கத்தில் தண்ணீர்கசிவுத் தரை இருக்கிறது. அந்தத் தரையில் கற்றாமரை என்றொரு மூலிகை இருக்கிறதாம். அந்த மூலிகையின் ஒரு இலையை கையால் தீண்டினால், அந்த இலை நான்கு இலையாக விரியுமாம். அந்த மூலிகையின் வேர் சடை போல் இருக்குமாம். இந்த வேரில் இரும்பு ஊசியைச் செருகி எடுத்தால் அது தாமிர ஊசியாக மாறி இருக்குமாம். பின்னர் அந்த தாமிர ஊசியை வேரின் வேறொரு இடத்தில் செருகி எடுக்க வெள்ளி ஊசியாக மாறி இருக்குமாம். மீண்டும் அந்த வெள்ளி ஊசியை வேரின் வேறொரு இடத்தில் செருகி எடுக்க அந்த ஊசியானது தங்க ஊசியாக மாறிவிடுமாம். மேலும் அந்த மூலிகையை கால்களில் மிதித்துக் கொண்டு பகலில் ஆகாயத்தைப் பார்த்தால் நட்சத்திரங்கள் தெரியுமாம். இந்தக் குறிப்புகளைக் கொண்டு இந்த மூலிகையை அடையாளம் கண்டு சாப நிவர்த்தி செய்து பறித்து அதன் வேரை நிழலில் உலர்த்தி சூரணம் செய்து ஒரு மண்டலத்திற்க்கு வெருகடிப் பிரமாணம் உட்கொண்டு வந்தால் காயசித்தி உண்டாகுமாம்.

நாளை சதுரகிரி மலையில் இருக்கும் மேலும் சில ஆச்சர்யமான மூலிகைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

சதுரகிரியின் அற்புத மூலிகைகள்!

,

சதுரகிரி மலையில் இருக்கும் அரிய விருட்சங்கள் மற்றும் மூலிகைகளின் பட்டியலை நேற்றைய பதிவில் பார்த்தோம். இனி வரும் நாட்களில் குறிப்பிட்ட சில அரிய மூலிகைகள் மலையின் எந்தப் பகுதியில் இருக்கிறது என்பதையும், அவற்றின் தன்மை மற்றும் மகத்துவத்தினைப் பற்றி பார்ப்போம்.

மிகவும் ரகசியமாய் பாதுகாக்கப்படுகிற சதுரகிரியின் தகவல்களை நான் பொதுவில் வைப்பதினால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி சில நண்பர்கள் தங்களின் ஆதங்கத்தினை தெரிவித்திருந்தனர். நான் தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஒரு கருத்தினையே அந்த நண்பர்களுக்கு பதிலாக வைத்திட விரும்புகிறேன். குருவருளால் மட்டுமே எதுவும் சாத்தியமாகும். நற்சிந்தனையும்,குருவருளும் வாய்க்கப் பட்டவர்களுக்கு மட்டுமே சித்தர் பெருமக்களால் சபிக்கப் பட்ட இந்த ரகசியங்கள் கைகூடும்.

வாருங்கள் மூலிகைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

முண்டகவிருட்சம்

சதுரகிரி மகாலிங்க மூர்த்தியின் சன்னிதிக்கு வடதிசையில் ஒரு நாளிகை தூரம் நடக்க முண்டகவனம் என்னும் ஒரு வனம் இருக்கிறது. அந்த வனத்தின் வட மேற்கு மூலையில் இந்த முண்டக விருட்சங்கள் வளர்ந்திருக்கும். தோற்றத்தில் ஆல விருட்சம் போல் இருந்தாலும், இதன் இலைகள் சிறியதாகவும் காய்கள் கலத்திக்காய் போலவும் இருக்கும். இந்த மரத்தை தட்டினால் பால்வருமாம்.

அந்தப் பாலை தினமும் அரைக்காற் படியாக முப்பது நாளைக்கு சாப்பிட மூர்ச்சை ஆகுமாம். அப்போது ஒருவர் அருகில் இருந்து பசுப்பலை நன்கு காய்ச்சி தேன்விட்டு கலந்து ஒருகரண்டி வீதம் அடிக்கடி மூர்ச்சையானவருக்கு பருகத் தர வேண்டுமாம் அப்படி தொடர்ந்து பருக மூர்ச்சை தெளியுமாம். மூர்ச்சை தெளிந்து ஒருவாரத்தில் காயசித்தி உண்டாகி விடுமாம்.உடல் தங்கநிறமாகுமாம், மலஜலம் பேதிக்குமாம்.

அழுகண்ணி

மேலே சொன்ன முண்டகவிருட்சத்திற்க்கு பக்கத்தில் வட்டப்பாறை ஒன்று இருக்கிறதாம், அதன் மேற்குப் பகுதியில் கசிவுத்தரையும் அதில் நெரி கற்களும் நிறைந்த ஒரு இடம் இருக்கிறது. அந்த இடத்தில் அழுகண்ணி என்ற மூலிகைகள் வளர்ந்திருக்கும். அதன் இலை பலாச்சுளை போல் இருக்கும். பூமஞ்சள் நிறமாகவும் காய் செந்தட்டிக்காய் போலவும் இருக்கும். இதை சாப நிவர்த்தி செய்து பிடுங்கி அதன் வேரை சூரணித்து பசு நெய்யுடன் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் நரை, திரை, மூப்பு, பிணி இன்றி நெடுங்காலம் வாழலாமாம்.

தொழுகண்ணி

மேலே சொன்ன அழுகண்ணி மூலிகை இருக்கும் இடத்திற்கு மேல் புறமாக தொழுகண்ணி என்னும் மூலிகை இருக்கிறது, அதன் இலை அலரி இலை போலிருக்கும், பூ வெண்மை நிறமாகவும் , தூர் கறுப்பு நிறமாகவும் இருக்கும், இது சூரியனை நோக்கியபடி இருக்கும். இந்த குறிப்புகளைக் கொண்டு இதனை தேடி அறிந்து, இலையில் கொஞ்சமும், முன்னர் கூறிய அழுகண்ணி இலையில் கொஞ்சமும் சம அளவில் எடுத்து சூரணித்து அந்த சூரனத்தில் திரிகடிப் பிரமாணம் எடுத்து பசும் பாலில் போட்டு அருந்தினால் காயசித்தி உண்டாகுமாம்.

நாளைய பதிவில் மேலும் கற்பக விருட்சம் மற்றும் சஞ்சீவி மூலிகையின் அற்புதங்களைப் பற்றி பார்ப்போம்.

காயகற்பம் உண்ணும்போது பத்தியம் தவறினால்...

, , ,
"நிசமான கற்பங்கள் தின்னும் போது
நிசமான சடத்திற்கு வருத்த மேது
பாசமான கற்பமுண்போன் பத்திம்விட்டு
புசமான பெண்ணோடு புணர்ச்சிகொண்டால்
பேரான சயரோகம் சண்ணும் பாரு
வேளப்பா கற்பமுண்போன் புளிதின்றாக்கால்
மிடுக்கான பெரு வயிறு யுப்பலாகி
காளப்பா கால்கடுப்புமா குந்தானே
"

- போகர் -

உண்மையான கற்பங்கள் உண்ணும் போது உண்பவரது உடலுக்கு எந்த வருத்தமும் இருக்காது, கற்பம் உண்பவன் பத்தியம் கடைப்பிடிக்க தவறி பெண்ணோடு புணர்ச்சிகொண்டால் சயரோகம் உண்டாகும், கற்பம் உண்பவன் புளி தின்றால் அவன் அழகான வயிறு வீங்கி, கால் கடுப்பும் உண்டாகுமாம்.

"தானென்ற கற்பமுண்போன் கிழங்கு தின்றால்
தன்னுடம்பில் சோகையோடு பாண்டுவாகும்
மீனென்ற மாமிசங்கள் மீறித் தின்றால்
மிக்கன மயக்கமொடு சுரமுமாகும்
மோனென்ற தாகத்தால் மோருகொண்டால்
மிகையான குன்மாவலி மிடுக்குமாகும்
பானென்ற பச்சையுப்பு தின்றாயானால்
பட்டுதடா கண்ணிரெண்டும் பரிந்துகாணே"

- போகர் -

கற்பம் உண்பவர் கிழங்கு சாப்பிட்டால் தன்னுடம்பில் சோகையோடு பாண்டு என்ற வருத்தமும் உண்டாகும், மீன், மாமிசங்கள் சாப்பிட்டால் அதிக மயக்கத்துடன் காய்ச்சலும் உண்டாகும், தாகம் என்று சொல்லி மோர் அருந்தினால் அதிகளவான வயிற்றுவலி வரும், உப்பு சாப்பிட்டால் கண்கள் இரண்டும் பார்க்கும் சக்தியை இழந்து விடுமாம் என்கிறார் போகர்.

பத்தியமில்லா காயகற்பமுறை...

, , ,
"வடிவான கிளி மூக்கு மரமதொன்று
மகாஉயர்த்தியாயிருக்கும் மகத்தானமரம்
இடிவான யிலையதுவும் அரிசிபோலிருக்கும்
ஏத்தமாம் பூப்பூத்த மற்றநாள் பழமாம்
படிவான பழத்தையுண்டால் சாமத்தில்பற்பமாகும்"


- போகர் -

கிளி மூக்கு என்று ஒரு வடிவான மரம் உள்ளது, அது மிகவும் உயரமாக இருக்கும், அந்த மரத்தின் இலை அரிசி போல இருக்கும், அந்த மரமானது பூப்பூத்த அடுத்த நாளே பழமாகி பழுத்து விடும். அந்தப் பழத்தை உண்ட அன்று இரவே காய கற்பம் ஆகும் என்கிறார் போகர்.

காயகற்ப முறை - 04

, , ,
"உண்மையாய்க் கருப்பாக வேம்புண்டாக்கி
உகந்துமே மண்டலம் தான் கொண்டாயானால்
வெண்மையாஞ் சரீரமது கருவண்டு போலாம்
மேனியில் ரோமமெல்லாம் நிமிர்ந்தெழும்பும்
தண்மையாய் சடந்தானும் கற்பாந்தகாலம்
சமாதியிலே யிருக்கலாந் தழுக்காய்க்காணும்
ஒண்மையா இருட்டறையி லிருந்தாயானால்
உதிக்கின்ற கதிர்போலே யிருக்கும்பாரே"


- போகர் -


கருவேம்பின் பட்டை, வேர் இவைகளை எடுத்து உலர்த்தி காய வைத்து, தூளாக்கி தினமும் மாலை வேளையில் ஒரு பலம் அளவு எடுத்து ஒருமண்டலத்திட்கு உண்டு வந்தால் உடம்பில் உதிர்ந்த ரோமமெல்லாம் சீராக மீண்டும் வளரும், இந்தக் கற்பம் உண்ணும் காலத்தில் சமாதியிலே இருக்கலாம் அது சிறப்பாகக் கைகூடும், இந்த கற்ப மருந்து உண்ணும் காலத்தில் இருட்டறையில் இருந்தால் உடம்பானது சூரியன் உதிக்கும் போது எப்படி இருக்குமோ அது போல ஒளி வீசும் என்கிறார் போகர்.

காயகற்ப முறை - 03

, , ,
"கண்டிலேன் கற்பூர வில்வந்தானும்
கடிந்தரைத்துப் பாக்களவு பாலிலுண்ணு
அண்டில்லா அக்கினியை தானவிக்கும்
அழுந்துகின்ற மேகமெல்லாம் சாடிப்போகும்
மண்டிலேன் வாதபித் தத்தை நீக்கும்
வாய்நீர்தான் மிகூறல் வற்றிப்போகும்
வெண்டில்லா மேனி சரசரப்புப்போகும்
மிக்கன வெள்ளெழுத்து மீறிடாதே"


- போகர் -

கற்பூர வில்வம் எனும் மூலிகையை எடுத்து நன்றாக அரைத்து பாக்களவு எடுத்து பாலுடன் சேர்த்து ஒருமண்டலம் மாலை வேளையில் உண்டால்.உடம்பிலுள்ள சூடு இல்லாது போவதுடன், வாதம் , பித்தங்களையும் போக்கி உமிழ் நீர் அதிகம் சுரப்பதும் நின்றுவிடும் அத்துடன் உடம்பிலுள்ள நோய்க்காரணிகள் அனைத்தும் இல்லாது போகும், ஆனால் பத்தியம் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று போகர் சொல்கிறார்.

காயகற்ப முறை - 02.

, , ,
"திறந்திட்ட விஷ்ணுகிராந்தி தனைக்கொணர்ந்து
மண்டலந்தான் பாக்களவு பாலில் அரைத்துண்ணு
மறந்திட்ட நினைவெல்லாம் மருவியுண்ணும்
மாசற்ற எலும்புக்குள் சுரந்தான் போகும்
கரைந்திட்ட தேகமது கறுத்து மின்னும்
கண்ணொளிதான் யோசனை தூரங்காணும்
இறந்திட்ட சுவாசமெல்லாம் இறுகியேறும்
ஏற்றமாஞ் சுழிமுனையும் திறந்துபோமே"


- போகர் -

விஷ்ணு கிராந்தி என்னும் செடியை எடுத்து (வேர்ப் பகுதியைத் தவிர்த்து) பால் விட்டு அதை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் பாக்களவு எடுத்து தினமும் மாலை வேளைகளில் தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் (ஒரு மண்டலம்) சாப்பிட வேண்டும்.

இப்படிச் சாப்பிட்டு வந்தால் மறந்து போன நினைவுகள் எல்லாம் திரும்பவருவதுடன் ஞாபகசக்தி அதிகரிக்கும், கண்பார்வையானது ஒரு யோசனை தூரம் வரை பார்க்கும் சக்தியைப் பெறும், உடம்பு கறுத்து ஒளிபெற்று மின்னும், சுவாசம் சிறப்பாக செயற் படுவதுடன், சுழிமுனை நாடியும் சிறப்பாக தொழிற்படத் தொடங்குமாம் என்கிறார் போகர்.

முக்கிய குறிப்பு :-

இதை சாப்பிடும் போது பத்தியம்(உணவு கட்டுப்பாடு) மிக அவசியம். எவற்றையெல்லாம் உணவில் தவிர்க்க வேண்டுமென முன்பே குறிப்பிட்டிருக்கிறேன்.

காயகற்ப முறை - 01.

, , ,



"வயிரமாம் நெல்லிமுள்ளி தனைவாங்கி
மருவ நன்றா யிடித்துமே யெடுத்து
ஆயிரமாம் அப்பிரேகச் செந்தூரந்தான்
அதற்க்கெட்டுப் பங்கு ஒன்றுசேர்த்து
துயிரமாந் தேன்தன்னில் குழைத்துண்ணு
சுகமாக மண்டலந்தான் உண்டாயானால்
கைரமாங் காயமது கருங்காலிக்கட்டை
கனல்போலே சோதியாய்க் காணும்காணே"


- போகர் -

நெல்லி வற்றலைத்தான் “நெல்லி முள்ளி” என்பர். இதே போல செந்தூரமும் தேவைப்படும். இவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

நெல்லி வற்றலை நன்கு இடித்து பொடியாக்கி கொள்ளவும். இப்போது எட்டு பங்கு நெல்லி வற்றல் பொடியுடன்,ஒரு பங்கு செந்தூரத்தை கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை மாலை வேளையில் அரை ஆழாக்கு அளவு எடுத்து சுத்தமான தேனில் குழைத்து சாப்பிட வேண்டும்.

இம்மாதிரி தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடம்பானது கருங்காலிக் கட்டை போல இறுகி நெருப்புபோல் செம்மையாக மின்னும் என்கிறார் போகர்.

முக்கிய குறிப்பு :-

இதை சாப்பிடும் போது பத்தியம்(உணவு கட்டுப்பாடு) மிக அவசியம். எவற்றையெல்லாம் உணவில் தவிர்க்க வேண்டுமென முந்தைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

கருவூரார் சொன்ன தேவ வசியம்...

, , , ,
"பாரப்பா நாக மல்லி மூலம் வாங்க
பாடுகிறேன் மந்திரந்தான் பண்பாய்மக்காள்
செய செய ஓம் கிலியும் பகவதா
வென்று தியானம் செய்து ஆரப்பா பிடுங்கி
வந்து நிழலு லர்த்தி அப்பனே பொடியாக்கி
திரியி லூட்டி பெறப்ப காராவின் நெய் யெரித்து
மையைப் போட்டிடவே தேவரெல்லாம் வசியமாவார்".


- கருவூரார் பலதிரட்டு -

விளக்கம் :-


பண்பான மாணவர்களே நாக மல்லி என்கின்ற செடியைப் பிடுங்க மந்திரத்தை சொல்லப் பாடுகிறேன் கேள் "ஜெய ஜெய ஓம் கிலியும் பகவதா" என்று மந்திரம் ஜெபித்து பிடுங்கிவந்து நிழலில் காயவைத்துப் பொடிசெய்து துணியில் வைத்து உருட்டி திரியாக்கி ஒரு விளக்கில் காராம் பசுவின் நெய் விட்டு முன் செய்த திரியை அதில் போட்டு எரித்து அந்த மையை எடுத்து திலகமாக நெற்றியில் இட்டால் தேவர்கள் எல்லாம் வசியமாவார்கள் என்கிறார் கருவூரார் பலதிரட்டு என்ற நூலில்.

கருவூரார் சொன்ன மிருக வசியம்...

, , ,
"பாரப்பா வேண் குன்றி மூலம் வாங்க
நேரப்பா மந்திரந்தான் வம்வம் வசி வசி
நிறை மிருக வசீகரி ஓமென்று போற்றி
வேரப்பா பிடுங்கி யதைவா யிலிட்டு
பேசவே மிருக வசீகரங் காணும்".


- கருவூரார் பலதிரட்டு -

விளக்கம் :-


வெண் குன்றி மூலிகை வேர் எடுக்க, "வம் வம் வசி வசி மிருகவசீகரி ஓம்" என்கின்ற மந்திரத்தை சொல்லி, வேரைப் பிடுங்கி எடுத்து வாயில் போட்டுக் கொண்டு எந்த மிருகத்தை அழைக்கிறோமோ அது வசியமாகும் என்கிறார் கருவூரார் பலதிரட்டு என்ற நூலில்.

அகத்தியர் சொல்லும் சத்துரு வசியம் செய்யும் முறை...

, , ,
"தானான புலஸ்தியனே தருமவானே
தயாநி தியே சங்கநிதி சார்பேகேண்மா
கோணான வானை யேன்னு மூலிசாபம்
கொடுஞ் சுருக்கு பிரனவங்களே தென்றாக் கால்
மானானவட் சரமாம் றீங்ரீ யுமாகும்
மகத் தானவுரு வதுதான் லட்சமோது
பானான படை மன்னர் கோடி பாகம்
பாலகனே தலைவணங்கு மூலிதானே".


- அகத்தியர் மாந்திரீக காவியம் -

விளக்கம் :-

தருமவானே, தயாநிதியே, சங்கநிதியே, புலச்தியனே என் சீடனே கேள், கோணான வானை எனும் மூலிகையின் சாபம் நீக்குவதற்கு மந்திரம் "றீங்ரீ" என்று லட்முரு ஓதி எடுத்து உன்னுடன் வைத்துக் கொண்டால் உன்னை எதிர்த்து வரும் கோடிப் படையானாலும் தலை வணங்கும் மூலிகை தானே, என்கிறார் அகத்தியர் தனது மாந்திரீக காவியத்தில்.

எதற்காக மூலிகைகளுக்கு சாபநிவர்த்தி செய்ய வேண்டும்...

,
மனிதர்கள் உட்பட மற்ற ஜீவராசிகளுக்கு உள்ளது போல தாவர வர்க்கமாகிய மூலிகைகளுக்கும் உயிர் உண்டு. சாதாரணமாக நாம் அவற்றைப் பிடுங்கும் பொது அதன் உயிரானது பிரிந்து அது இறந்து விடும்.

பொதுவாக உயிரற்ற ஜடத்தால் எதுவும் செய்யமுடியாதல்லவா? உயிர் இருந்தால் தானே செயல்படமுடியும்.

ஆகவே,

மூலிகைகள் சிறப்பாக செயல்பட வேண்டுமாயின் அதன் உயிரை உடலிலே இருக்க செய்து பிடுங்க வேண்டியது அவசியமாகிறது.

மூலிகைகளின் சாப நிவர்த்தி செய்து பிடுங்கும் போது அதன் உயிர் உடலிலேயே தங்கி விடும். அப்போது அதன் செயற்பாடு சரிவர நடக்கும் அதனால் சாப நிவர்த்தி செய்ய வேண்டியது அவசியம்.

இப்படி சாப நிவர்த்தி செய்யாமல் பிடுங்கும் மூலிகைகள் எதற்கும் பயன்தரா.

சாப நிவர்த்தி செய்யப் பட்ட மூலிகைகளே மருத்துவத்திற்கும் பயன்படும், ஆனால் மருத்துவத்திற்கு பயன்படுத்தும் போது சாப நிவர்த்தி வேறு விதமாக இருக்கும்.

இந்த உலகத்தில் சித்தனென்ற பெயரெடுக்க...

, , ,
"ஒப்பான இன்னொரு முறைமை கூர்வேன்
ஓகோகோ நாதர்கள் மறைத்த செதி
செப்பவே விஷ்ணு வாங்க சாபம்
செம்மையுடன் மாணாக்க ளறிய வேண்டி
தப்பாது பிரணவ ங்களே தேன்றாக்கால்
தயாபரனே சிம் சிம் சிம் மென்றேயோது
எப்படியும் லட்ச முரு செபித் தாயானால்
ஏன் மகனேலோ கசித்த னாகுவாயே".


- அகத்தியர் மாந்திரீக காவியம் -

விளக்கம் :-

இன்னுமொரு முறை சொல்கிறேன் கேள், பெரிய பெரிய சித்தர்கள் எல்லாம் மறைத்த செய்தி உனக்காக சொல்கிறேன் விஷ்ணு வாங்க செடிக்கு சாபம் நீக்குவதற்கு மந்திரம் எதுவென்றால், என் மாணவர்கள் அறிந்து கொள்வதற்காய் சொல்கிறேன். "சிம் சிம் சிம்" என்று ஒருலட்சம் முறை செபித்து பிடுங்கி வைத்துக் கொண்டால், இந்த உலகத்தில் சித்தனென்ற பெயரெடுக்கலாம். என்கிறார் அகத்தியர் தனது மாந்திரீக காவியத்தில்.

அகத்தியர் சொல்லும் லோகவசியம் செய்யும் முறை...

, , ,
"ஆகுவா யம்பலவா புலஸ்தியா கேள்
அப்பனே பூனைத்தா ள்வணங்கு மேனி
வகுடனே சாபமத்தை நீக்குவதற்கு
வளம் பெரிய பிரணவமே தேன்றாக்கால்
சாகுயடைய வட்சரமாம் தூ தூ வாகும்
சதுர மன்னர் தான் மயங்குந் தழை தானாகும்
நாகுடனே லட்சமுருவோ துவோது
நாயக னேநாடெல்லாம் வைசியந் தானே"


- அகத்தியர் மாந்திரீக காவியம் -

விளக்கம் :-

புலஸ்தியன் என்ற என் சீடனே கேள், பூனை வணங்கி என்கின்ற செடிக்கு சாபம் நீக்குவதற்கு மந்திரம் எதுவென்றால் "தூ தூ " என்று ஓத சாபம் நிவர்த்தியாகும். சகல பலம் பொருந்திய மன்னரையே மயக்கக் கூடிய இந்தத் தழைக்கு ஒருலட்சம் தடவை "தூ தூ " என்று ஓதி உருக்கொடுத்து பிடுங்கி வைத்துக் கொண்டால் இந்த நாடு எல்லாமே உனக்கு வசியமாகும். என்கிறார் அகத்தியர் தனது மாந்திரீக காவியத்தில்.

அகத்தியர் சொல்லும் வேம்பின் பெருமை...

, ,



பொதுவாகவே வேப்ப மரத்தின் அரும் பெரும் குணங்கள் தற்போது பலருக்கு தெரியாது. அப்படித் தெரிந்தாலும் அது அம்மரத்தைப் பற்றிய பொதுவான குணமாகவே இருக்கும்.

வேம்பைப் பற்றி அகத்தியர் இயற்றிய நூல்களில் தத்துவம் முன்னூறு என்ற நூலில் மூன்றாவது ஞானகாண்டத்தில் வேம்பின் பெருமையை மிக அழகாகக் கூறுகிறார்.

“பாரப்பா வேம்பினூட பிறப்பைக் கேளு
பணியனையன் பாலாழி யமுர்தம் தனை
நேரப்பா பெண்ணுருவாய் தேவர்க்குப் படைத்தார்
நிகரில்லா ராட்சதர்கள் பெண்ணைப் பார்த்து
சாரப்பா மயங்கி நின்ற ரசுரர்ககளி லொருவன்
தானவர்கள் பந்தியிலே வந் திருந்த தாலே
சேரப்பா தேவருடன் கலந்திருந்த தாலே
திருமாலு மூன்றகப்பை படைத்தான் கேளே.”

விளக்கம் :-

வேம்பின் பிறப்பைப் பற்றிக் கூறுகிறேன் கேளு, திருமால் பெண்ணுருவம் கொண்டு அமிர்தத்தை தேவர்களுக்கு அகப்பையினால் பங்கிடும் போது, அசுரர்கள் அந்தப் பெண்ணின் அழகைக் கண்டு மயங்கி இருக்கையில், அசுரர்களில் ஒருவன் யாருக்கும் தெரியாமல் தேவர்கள் பந்தியில் வந்து அமர்ந்துவிட, திருமாலும் தேவர்களின் வரிசையில் தேவர்களைப் போல இருந்த அசுரனுக்கும் மூன்றகப்பை அமிர்தத்தைக் கொடுத்து விடுகிறார்.

“படைத்திட்ட பெருமாலாம் பெண்ணி னோடு
பருதி மதி யசுரனவ ரென்ற போது
உடைத்திட்ட அசுரனவன் னமுர்த முண்ண
ஓரடியா யாகப்பையினால் வெட்டினார் மால்
படைத்திட்ட யிரண்டாகி ரவி மதிக்கு
பகையாகி ராகுகே துக்களேன்றே சர்ப்பமானார்
அடைத்திட்ட அகப்பையினால் வெட்டும் போது
அவன்வா யாலமுர்த்த மாதைக் கக்கி னானே.


விளக்கம் :-

அமிர்தத்தை கொடுத்த திருமாலுக்கு அருகிலிருந்த சூரியனும், சந்திரனும், அவன் அசுரன் என்று ஜாடை காட்டிச் சொல்ல, அமிர்தத்தை சாப்பிட்டுக் கொண்டு இருந்த அசுரனை நோக்கித் திருமால் அகப்பையால் வெட்டி விட, அசுரன் தலை வேறு உடல் வேறாக வெட்டப்பட்டு, அடையாளம் காட்டிக் கொடுத்த சூரிய சந்திரர்களுக்கு பகைக் கிரகமான ராகு, கேது என மாறினார்கள்.

அகப்பையினால் வெட்டுப்படும் போது அசுரன் தனது வாயில் மீதமாக இருந்த அமிர்தத்தைக் கக்கினான்.

“கக்கும்போ தமூர் தமது லிங்கம், போலக்
காசினியில் விழுந்ததுவே வேம்பு மாச்சு
முக்கியமாய்க் கசப்பு வந்த தேதென்றாகால்
முனையசுரன் வாயில் நின்று வீழ்ந்ததாலே
சக்கியமாய் வேம்பு தின்றால் சாவோ யில்லை
சனகாதி நால்வருடன் யானுந் தின்று
அக்கண மேசித்திபெற் றவேம்பு நேர்மை
ஆரறிவா ருலகத்தோ ரறியார் காணே.”


விளக்கம் :-

கக்கும்போது அசுரனின் வாயிலிருந்து பூமியில் விழுந்த அமிர்தமானது வேப்பமரமானது. வேம்புக்கு கசப்புச்சுவை வந்த காரணம் என்ன வென்றால், அசுரனின் (பாம்பின்) நச்சு வாயிலிருந்து வெளிப்பட்டதால் தான். அப்படிப் பட்ட வேம்பை உண்டு வந்தால் மனிதனுக்கு சாவு என்பதே கிடையாது. இப்படிதான் சனகாதி நால்வருடன் ( என் குருமார்கள் நால்வருடன்) சேர்ந்து நானும் சாப்பிட்டு காயசித்தி பெற்றேன். இப்படிப்பட்ட வேம்பின் பெருமையை இந்த உலகத்தில் யார் அறிவார் என்று மிகதெளிவாக வேம்பின் பெருமையை அகத்தியர் தெளிவுபடக் கூறுகிறார்.

காயசித்தி :- காயம் என்றால் உடம்பு சித்தி என்றால் சித்திக்கும், ஆகவே, அழிவில்லா உடல் சித்திக்கும் என்று பொருள். 

Raja Yoga Meditation - Dr.VS.Suresh Phd.,

Raja Yoga Meditation *** Dr.VS.Suresh Dr.Ac,FRHS,Phd., Cell:9884380229



As your consciousness continues to move in your third eye, pastel colors begin to appear in your forehead. Sumptuous, glorious pinks, yellows, whites, blues, indigos, greens, and purples take their turn or play in combination in your forehead. Then, you may think you are seeing fireflies, lightning, or moonlight as your life force becomes more concentrated and more actively prepares you to behold higher consciousness. This process is readying you to experience your true nature as pure consciousness, pure spirit, pure awareness.
sun over cloudsAnd then the light in your forehead blazes brighter than the sun! But, you find it is soothing to look into the awesome light, soothing to behold it. This is the brilliance of your inner light, your essence, revealing itself to you.
Raja yoga, particularly, requires a teacher because it is easy to strain yourself, and it’s also easy to delude yourself into high level hallucinations rather than actual experiences of your higher consciousness.
However, the genuine raja yogi lives in bliss, with his, or her, will surrendered to God. A raja yogi realizes the profound truth of the Biblical passage: If therefore thine eye be single, thy whole body shall be filled with light.